நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை, கே.வி.தங்கபாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தினார்கள்.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நடிகர் எஸ்.வி.சேகர். ஆரம்பம் மேலும்படிக்க
google1
Sunday, February 6, 2011
நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. காங்கிரசில் இணைந்தார் தலைவர்கள் வாழ்த்து சென்னை, பிப்.7- நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை, கே.வி.தங்கபாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தினார்கள். நடிகர் எஸ்.வி.சேகர் 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நடிகர் எஸ்.வி.சேகர். ஆரம்பம் முதலே, இவருக்கும், கட்சி தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது. அதன்பின்னர், கட்சியில் இருந்தும் ஓரம்கட்டப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக எஸ்.வி.சேகர் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு வந்த எஸ்.வி.சேகர், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், மத்திய மந்திரி ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், ராணி வெங்கடேசன், விஷ்ணுபிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வர்த்தக பிரிவு துணை தலைவர் சித்ரா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது, ``தமிழகத்தில் தனக்கென்று ஒரு முகவரி வைத்துள்ள, கலைத்துறையில் சிறந்து விளங்கும் எஸ்.வி.சேகர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார். சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆசியோடு அவர் இணைந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவரை அன்புடன் வரவேற்கிறது'' என்றார். தேர்தல் பிரசாரம் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, ``திரைப்பட உலகில் சொன்ன வாக்கை காப்பாற்றுபவர் என்றால், அது எஸ்.வி.சேகர் தான். தேசிய உணர்வுள்ளவர் அவர். தற்போது, பல கட்சிகளில் நடிகர்-நடிகைகள் எல்லாம் சேர்ந்து வருகிறார்கள். அவர்கள் காசுக்காகத்தான் தேர்தல் பிரசாரம் செய்வார்கள். கொள்கைக்காக அல்ல. நாடு காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும்'' என்றார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது:- மிகப்பெரிய கட்சி இந்தியாவில் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைவதை கவுரவமாக கருதுகிறேன். அரசியல் நாகரீகம் மிகுந்த கட்சி காங்கிரஸ். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இங்கு உண்டு. வாழ்நாள் முழுவதும் இதில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ளேன். நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக சீட் கேட்டு காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. முன்பு, அ.தி.மு.க.வில் சேரும்போதுகூட சீட் கேட்கவில்லை. அவர்களாகத்தான் சீட் தந்தனர். நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்வதாக கூறினேன். அவரும் வாழ்த்தி அனுப்பினார். என்னைப்போல் நடிகர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார். தங்கபாலு பேட்டி அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. தி.மு.க. கூட்டணியில் வேறு எந்த கட்சிகளை சேர்ப்பது என்பது குறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் தான் முடிவு செய்வார்கள். தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் குழு ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவினர் சோனியாகாந்தியின் அறிவுரைப்படி செயல்படுவார்கள். நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசில் இணைந்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment