google1

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் படம் ரிலீஸ் செய்ய வேண்டும் : கமலுக்கு பெருகும் இயக்குனர்கள் ஆதரவு

விஸ்வரூபம் பட தடை விவகாரத்திற்கு பிறகு கமல் இன்று காலை பேட்டி அளித்தார். அப்போது "தமிழகத்தை விட்டு வேறு மதசார்பற்ற நாட்டில் குடியேறுவேன்" என்று கூறினார்.

அவருடைய இந்த பேட்டி தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை மேலும்படிக்க

ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கமல் சம்மதம்

விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட தாம்  காரணமாக மேலும்படிக்க

தமிழகத்தை விட்டு வேறு மதசார்பற்ற நாட்டில் குடியேறுவேன்: கமல் குமுறல்

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, படம் வெளியிட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல் ஹாசன். அப்போது அவர் கூறியதாவது, "விஸ்வரூபம் படம் நடக்கும் மேலும்படிக்க

விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும்: உயர் நீதிமன்றம்

விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட நடிகர் கமலஹாசன் முடிவெடுத்துள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து மேலும்படிக்க

Tuesday, January 29, 2013

'ஏர்செல்' ரோமிங் கட்டணம் நீக்கம்

ஏர்செல் நிறுவனம் ரோமிங் கட்டணத்தை நீக்கி உள்ளது. மொபைல் போனில் இருந்து, மாநிலம் விட்டு மாநிலம் பேசும்போது, டயல் செய்பவரும், மறுமுனையில் பேசுபவரும் ரோமிங் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இப்போது, ரோமிங் கட்டணம் மேலும்படிக்க

தாய், மகளை கொன்று 70 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளை கொலை செய்து 70 சவரன் நகை, ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தர்மபுரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவருடைய மேலும்படிக்க

40 நிமிடத்தில் 1015 மாணவர்களுக்கு மொட்டையடித்து சாதனை

காந்தி வேடமணிந்து பேரணி செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அருகே 40 நிமிடத்தில் 1015 மாணவர்களுக்கு மொட்டையடித்து சாதனை நிகழ்த்தப்பட்டது.

காந்தி உலக மையம் என்ற அமைப்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிறது. மேலும்படிக்க

நடிகர் விவேக்குக்கு அபராதம்

சென்னை விமான நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால் நடிகர் விவேக்குக்கு அபராதம் விதித்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளான விமான நிலைய நுழைவு மேலும்படிக்க

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு மேலும்படிக்க

சிவகாசி, விருதுநகர் பகுதியில் 11 பட்டாசு ஆலைகள் உரிமம் ரத்து

விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், விதிமீறல் காரணமாக 11 ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி துவக்கத்தில் நடந்த பட்டாசு விபத்தை தொடர்ந்து, தொழிற்சாலை துணை தலைமை மேலும்படிக்க

18 மீனவர்கள் நடுக்கடலில் சிறைப்பிடிப்பு: தூத்துக்குடி அருகே பரபரப்பு

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து காத்திருந்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து வந்த இரு விசைப்படகுகள் அந்த வழியாக கடக்க முயன்ற போது தருவைகுளம் மீனவர்களின் வலைகள் மேலும்படிக்க

நடிகை ரோஜா கைது

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்ட நடிகை ரோஜா கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்டமாக வருகிற 4–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும்படிக்க

கர்நாடகத்தில் 12 பாஜக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்பு

கர்நாடக மாநிலத்தில், எடியூரப்பா ஆதரவாளர்களான பா.ஜனதாவை சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் போப்பையாவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.  நீண்ட சட்ட ஆலோசனைக்குப் பிறகு 12 பேரின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாகத் மேலும்படிக்க

கர்நாடக ஜனதாவில் இருந்து எடியூரப்பா நீக்கம்

கர்நாடக ஜனதா கட்சி தலைவர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கியுள்ளதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் பிரசன்னகுமார், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

7ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் பிரசன்னகுமார் மேலும்படிக்க

விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடை ரத்து

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நேற்றிரவு ரத்து செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது.  

தமிழகம் முழுவதும் பர பரப்பாக எதிர்பார்க்கப் பட்ட விஸ்வரூபம் படத்தின் தீர்ப்பு மேலும்படிக்க

சென்னை மெரினா கடற்கைரையில் கடைகளை அகற்ற உத்தரவு!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கடைகளை அப்புறப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையின் அழகை பாதுகாக்கக் கோரி காந்திஜி நுகர்வோர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், மேலும்படிக்க

யூ டியூபில் விஸ்வரூபம்

யூ டியூபில் வெளியான விஸ்வரூபம் படத்தை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் முடக்கியுள்ளது. யூ டியூபில் வெளியானது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யூ மேலும்படிக்க

அழகிரியின் ஆதரவாளர்களுக்கு திமுக எச்சரிக்கை

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளையோட்டி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் கோபமுற்றுள்ள திமுக, அழகிரி ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பல்வேறு விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அவை, திமுக தலைமையை மேலும்படிக்க

'விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதித்தது சட்ட விரோதம்

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், சுமார் ரூ.100 கோடி செலவில் தயாரித்துள்ள படம் 'விஸ்வரூபம்'. கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள இந்த படம், பொங்கலன்று ரிலீஸ் ஆக இருந்தது. தியேட்டரில் வெளியிடுவதற்கு மேலும்படிக்க

விஸ்வரூபம் படத்துக்கு கர்நாடக அரசு அனுமதி

விஸ்வரூபம் படத்தைத் திரையிட, கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.முழுப் பாதுகாப்புக்கு அம்மாநிலக் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்காரஜூ அளித்த பேட்டியில், "பெங்களூருவில் உள்ள 17 தியேட்டர்கள் உள்பட கர்நாடகாவில் மேலும்படிக்க

Monday, January 28, 2013

ஈஞ்சம்பாக்கம் மீனவர் வலையில் ஒன்றரை டன் சுறா சிக்கியது

ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த மீனவர்கள் கஜபதி, கோபி, ராஜேந்திரன், மகேந்திரன், சங்கர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பைபர் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ஆழமான பகுதியில் மேலும்படிக்க

‘விஸ்வரூபம்' படத்திற்கு பாதுகாப்பு - சிவசேனா அறிக்கை

சிவசேனா மாநில தலைவர் ஆர்.குமாரராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் சில வருடங்களாக திரைப்படங்களை மத ரீதியாக எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய இந்தியாவில் என்ன நடக்கிறது என்ற யதார்த்தமான ஒரு கதையை மேலும்படிக்க

போதை வாலிபரால் தாக்கப்பட்ட எஸ்ஐ பரிதாப சாவு

சென்னை வளசரவாக் கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கதிரேசன் (49). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம். மனைவி பகவதி. ஒரு மகள், மகன் உள்ளனர்.  

வளசரவாக்கம் ஆற்காடு மேலும்படிக்க

மதுரை ஆதீனத்திற்கு எதிரான நித்தியானந்தாவின் மனு தள்ளுபடி

மதுரை ஆதீன அறக்கட்டளை கலைக்கப்பட்டது முறையல்ல என்று கூறி ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை மேலும்படிக்க

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய , ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நிலையில் இந்திய , ரஷ்ய விஞ்ஞானிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இறுதி கட்ட ஆய்வை துவக்கியுள்ளனர்.  நெல் லை மேலும்படிக்க

விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பை எதிர்த்து, வைகோ வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் வைகோ மேலும்படிக்க

விஸ்வரூபம் சிடி கடத்தலை தடுக்க தீவர நடவடிக்கை

விஸ்வரூபம் திரைப்படத்தின் திருட்டு சிடி, டிவிடி வெளியாவதை தடுக்க திருட்டுவீடியோ தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் விஸ்வரூபம் படம் வெளியாகாமல், பிற மாநிலங்களில் வெளியானதால் பிற மாநிலங்கள் வழியாக விஸ்வரூபம் மேலும்படிக்க

ஜனாதிபதி - டெசோ அமைப்பு உறுப்பினர்கள் சந்திப்பு

'டெசோ' அமைப்பின் உறுப்பினர்களும்,  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஈழத்தில் அமைதி, சமத்துவம் ஏற்பட ஐ.நா. சபை மூலம் வலியுறுத்த வேண்டும் என்றனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெசோ மேலும்படிக்க

ப.சிதம்பரம்–ஷிண்டே மீது மோசடி வழக்கு ஆந்திர கோர்ட்டு அதிரடி உத்தரவு

தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் சுஷீல்குமார் ஷிண்டே, ப.சிதம்பரம் ஆகியோர் மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு ஆந்திர போலீசாருக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மேலும்படிக்க

தமிழகத்தில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் திறந்து விடாதது ஏன்? கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி, 1992-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை காவிரியில் மேலும்படிக்க

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 13 எம்எல்ஏக்களை நீக்க வேண்டும்

பாரதிய ஜனதா அரசை கவிழ்க்க எடியூரப்பாவுடன் சேர்ந்து 13 எம்எல்ஏக்கள் சதி செய்கின்றனர். அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் முதல்வர் ஷெட்டரின் ஆதரவாளர்கள் நேற்று மனு அளித்தனர்.

எடியூரப்பா மேலும்படிக்க

தாய் கண் முன் மகள் பலாத்காரம்

தாய் கண் முன்பு மனவளர்ச்சி குன்றிய 17 வயது மகளை பலாத்காரம் செய்த ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் வால்பாறை வாகமலை தேயிலை தோட்ட மேலும்படிக்க

விஸ்வரூபம்: உயர்நீதிமன்ற தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு

'விஸ்வரூபம்' படத்துக்கு அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என ஐகோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் மேலும்படிக்க

விஸ்வரூபத்தைத் தொடர்ந்து அமீரின் ஆதிபகவனுக்கும் ஆப்பு?

இயக்குநர் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படம் சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், இந்தப் புதிய புகார் காரணமாக கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் மேலும்படிக்க

அரேபிய ஆண் குதிரையின் ஆசை வேகத்தால் உயிர் இழந்த பெண்....!!

மலேசியா நாட்டில் உள்ள கம்பங் பாண்டான் பாலம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரேஸ் குதிரைகளை வளர்த்து வருகிறார். இந்த குதிரைகளில் ஒன்று சமீபத்தில் இறந்து விட்டது. அந்த குதிரையின் பிரேத பரிசோதனை அறிக்கையை மேலும்படிக்க

டெல்லி பாலியல் வழக்கில் 6வது நபர் சிறுவன் என அறிவிப்பு

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் 6வது எதிரி கல்வி சான்றுப்படி சிறுவன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 6வது எதிரியின் பள்ளிச் சான்றிதழில் பிறப்பு தேதி 1995 ஜூன் 4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்படிக்க

Sunday, January 27, 2013

நேதாஜி மறைவில் மர்மம்: உண்மையை அறிய அரசு முயற்சிக்கவில்லை

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திபபோஸ் மறைவின் உண்மைகளைத் தெரிந்து கொள்ள அரசு முழுமையாக முயற்சிக்கவில்லை என்று அவரது மகள் அனிதா போஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து தீவிரமாகப் மேலும்படிக்க

போலீஸ் ஸ்டேஷனில்எஸ்.ஐ., சுட்டுக் கொலை

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ராஜானுகுண்டே போலீஸ் ஸ்டேஷனில், சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயகுமார். இந்த போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன் தினம், இரவு பணியில் இருந்த, போலீஸ்காரர் ஆனந்தகுமார், நேற்று காலை பணி முடிந்ததும், வீட்டுக்கு மேலும்படிக்க

அமலா பால் போட்ட 'கங்னம் ஸ்டைல்' ஆட்டம்

தெலுங்கில் முன்னணி நடிகையாகியுள்ள, அமலா பால், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், அல்லு அர்ஜுனுடன், "இட்டராமய்யலதே" என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, பாங்காக்கில் நடந்தது.அப்போது, பிரபலமான ஒரு ஓட்டலில், படக் மேலும்படிக்க

சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி 3 வாலிபர்கள் கைது

தஞ்சை அருகே சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக 3 பேர் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சீரத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தஞ்சை மாவட்டம் மேலும்படிக்க

கடலுக்கு அடியில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனை - இந்தியா வெற்றிகரமாக நடத்தியது

கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட கே-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இதுகுறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் வி.கே.சரஸ்வத் கூறியதாவது:

கடலுக்கு அடியில் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து மேலும்படிக்க

அதிவேக ரெயில்களின் கட்டணம், ரூ.20 வரை உயருகிறது

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற அதிவேக ரெயில்களின் கட்டணம் 20 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.ரெயில்வே பட்ஜெட்டிற்கு முன்னதாகவே, கடந்த 22–ந்தேதி அன்று ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதற்கு முன்பாக, கடந்த மாதத்தில் அனைத்து மெயில் மேலும்படிக்க

விஸ்வரூபம் இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு

விஸ்வரூபம் படப்பிரச்சினையில் இன்று(திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

விஸ்வரூபம் படப்பிரச்சினையில் இன்று(திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னையில் மேலும்படிக்க

இரவு விடுதியில் தீ விபத்து 233 பேர் உடல் கருகி பலி

பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு நடந்த திடீர் தீ விபத்தில் 233 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தெற்கு பிரேசிலில் ரியோ கிராண்டே மாகாணம் உள்ளது. மேலும்படிக்க

அலகாபாத்தில் மகா கும்பமேளா - திரிவேணி சங்கமத்தில் 50 லட்சம் பேர் புனித நீராடினார்கள்

அலகாபாத்தில் மகாகும்பமேளாவில் தைப்பூச பவுர்ணமியையட்டி திரிவேணி சங்கமத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மதச்சடங்குகளை நடத்தி புனித நீராடினார்கள். இதையட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் மகாகும்பமேளா விழா கங்கை மேலும்படிக்க

ஜப்பான் நிர்வாண நடிகையின் 'விந்து' ஆசை

வித, விதமான தபால் தலைகள் சேகரிப்பு, நாணயங்கள் சேகரிப்பு போன்ற பொழுது போக்குகளில் சிலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால், ஜப்பான் நாட்டின் முன்னணி நிர்வாணப்பட நடிகையான உடா கொஹாகுவின் ஆசை விபரீதமானது. அந்த நடிகை மேலும்படிக்க

நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுதலை

நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நைஜீரிய கடல் பகுதியில் எண்ணெய் ஏற்றுவதற்காக செல்லும் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அதில் உள்ள ஊழியர்களை கடத்துவது வழக்கம். பின்னர் அந்த மேலும்படிக்க

சகோதரியின் குழந்தையை வெட்டி கறி சமைத்த வாலிபர் கைது

சகோதரியின் இரண்டு வயது பெண் குழந்தையை, துண்டு துண்டாக வெட்டி, கறி சமைத்தவர் கைது செய்யப்பட்டார்.

ரஷ்யா, ஓல்டோன்டோ போர்சின்ஸ்கி மாவட்டம், சிட்டா கிராமத்தில் இரு தினங்களுக்கு முன் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி மேலும்படிக்க

பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர் கைது

மாணவியர், 20 பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வில்மிங்டன் பகுதியில், ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு, ராபர்ட் பிமென்டல்,(வயது  57), என்பவர் ஆசிரியராக மேலும்படிக்க

Saturday, January 26, 2013

வெனிசுலா சிறையில் கலவரம் - துப்பாக்கி சூடு; 50 பேர் பலி

வெனிசுலா நாட்டு சிறையில் நடந்த பயங்கர கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர். 90-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட மேற்கு பகுதியில் உள்ள லாரா மாநிலத்தில் உரிபனா சிறைச்சாலை உள்ளது. மேலும்படிக்க

குடியரசு தினத்தை முன்னிட்டு 158 ஆண்டு பழமையான நீராவி ரயில் இன்ஜின் இயக்கம்

குடியரசு தினத்தை முன்னிட்டு, எழும்பூரில் இருந்து கிண்டி வரை நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரயில் நேற்று இயக்கப்பட்டது.

இந்தியாவின் பாரம்பரியத்தை நினைவு கூறவும், நீராவி என்ஜின் ரெயிலை பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மேலும்படிக்க

பலருடன் தொடர்பு - அடங்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை உருட்டுகட்டையால் சரமாரியாக அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த புத்தகரம் வள்ளலார் நகரை சேர்ந்த பிரகாஷ் (எ) பாண்டி (வயது 28). இவரது மனைவி மேலும்படிக்க

விஸ்வரூபம் விவகாரம் திரைத்துறையினர் கருத்து

'விஸ்வரூபம்' பட பிரச்சினை தொடர்பாக திரையுலக பிரபலங்கள் அறிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு:

அமீர்

இயக்குனர் சங்க செயலாளரும் பெப்சி தலைவருமான அமீர், 'விஸ்வரூபம்' பிரச்னை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:

நான் மேலும்படிக்க

திருவனந்தபுரத்தில் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம்

திருவனந்தபுரத்தில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் திரண்டு சென்று நேற்று முன்தினம் முதல் நாள் காட்சிகளை பார்த்து ரசித்தனர். நேற்றும் ஏராளமான ரசிகர்கள் அந்த தியேட்டர்களில் குவிந்தனர். மேலும்படிக்க

மீண்டும் பேச தயார் - அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி

"நான், தனி மனிதன். அரசாங்கம் அல்ல. விஸ்வரூபம் படம் தொடர்பாக முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயாராக இருக்கிறேன்" என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக, கமல்ஹாசன் நடித்து, டைரக்டு செய்துள்ள விஸ்வரூபம் மேலும்படிக்க

'பத்மஸ்ரீ விருது, எனக்கு கிடைத்த கவுரவம்' - நடிகை ஸ்ரீதேவி

மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது, தனக்கு கிடைத்த கவுரவம் என்று, நடிகை ஸ்ரீதேவி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

குடியரசு தினத்தையட்டி 108 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று முன்தினம் வழங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல மேலும்படிக்க

கேரள ஏரியில் படகு கவிழ்ந்து சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் பயணம் செய்த படகு ஏரியில் கவிழ்ந்து 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மீட்கப்பட்ட 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, தியாகராயநகர் சரவணா தெருவில் மேலும்படிக்க

விஸ்வரூபம் திரைப்படத்தை ஐகோர்ட்டு நீதிபதி பார்த்தார்

இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையானதா? என்பதை முடிவு செய்வதற்காக விஸ்வரூபம் திரைப்படத்தை நீதிபதி கே.வெங்கட்ராமன் நேற்று பார்த்தார்.

விஸ்வரூபம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இஸ்லாமியர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு மேலும்படிக்க

"பத்மபூஷண் விருதை ஏற்க மாட்டேன்" பின்னணி பாடகி எஸ்.ஜானகி பேட்டி

"காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, "பத்ம பூஷன்' விருதை, ஏற்கப் போவது இல்லை,'' என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி கூறியிருக்கிறார்.

1957-ம் வருடம், Ôவிதியின் விளையாட்டுÕ என்ற தமிழ் மேலும்படிக்க

சென்னையில் குடியரசு தின விழா - கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றினார்

இந்தியாவின் 64-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும்படிக்க

ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின கொண்டாட்டம்

டெல்லியில் 64-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நமது நாட்டின் மிக உயரிய கலாசார பெருமையையும், ராணுவ பலத்தையும் வெளிக்காட்டும் வண்ணமயமான அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் நடந்த விழாவில் 21 பீரங்கி குண்டுகள் மேலும்படிக்க

சிகாகோவில் கிறித்தவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

"ஒருவரை ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றி விட‌லாம். ஆனால் அவருள் உள்ள  நாட்டை(நாட்டுப்பற்றை-உணர்வை) வெளியேகொண்டு வரமுடியாது." வெளிநாடு சென்றாலும் மண்வாசனை மாறாது எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.

சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் மேலும்படிக்க

விஸ்வரூபம் படத்தின் கதை!

விஸ்வரூபம் படம் கேரளா, கர்நாடகாவில் வெளியானதால் இணைய தளங்களில் விமர்சனங்கள் வந்துள்ளன. வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்களும் இன்டர்நெட் பிளாக்குகளில் கதையை வெளியிட்டு உள்ளனர்.

படம் பார்த்த முஸ்லிம் அமைப்பினர் சிலரும் கதை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்படிக்க

கமல் நல்ல கலைஞன்: காயப்படுத்தாதீர்கள்- பாரதிராஜா

தமிழ் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தமிழ் கலைஞனை ஏதோ ஒருசில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும்படிக்க

விஸ்வரூபம்: கமலுக்கு பாமக தலைவர் ராமதாஸ் ஆதரவு !

விஸ்வரூபம் படத்திற்கு நீக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசை  பாமக தலைவர் ராமாதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நேற்று வெளியிடப்படுவதாக மேலும்படிக்க

மகா கும்பமேளாவில் திடீர் தீவிபத்து; 19 பக்தர்கள் படுகாயம்

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா வளாகத்தில் உள்ள 2 பந்தல்களில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் இந்துக்களின் மிக பிரமாண்டமான கும்பமேளா தொடங்கி நடந்து மேலும்படிக்க

மலேசியாவில், தமிழ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

சினிமா படப்பிடிப்பை உண்மை சம்பவம் என நினைத்து புகார் செய்ததால், மலேசியாவில் தமிழ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

உதயா கதாநாயகனாக நடிக்கும் "ஆவிகுமார்" என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பு கடந்த 28 நாட்களாக மலேசியாவில் நடைபெற்று வருகிறது. மேலும்படிக்க

திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 மாணவிகள் பலி

திருவண்ணாமலையை அடுத்த வேடியப்பனூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரின் மகள் தமிழரசி (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பலராமனின் மகள் மீனா (12) 7-ம் வகுப்பு படித்து மேலும்படிக்க

தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு தூக்கு தண்டனை விதிக்க மத்திய அரசு வற்புறுத்தல்

மும்பை தாக்குதல் வழக்கு சதிகாரன் டேவிட் ஹெட்லிக்கு அமெரிக்காவில் வழங்கப்பட்ட 35 ஆண்டு ஜெயில் தண்டனை ஏமாற்றம் அளிப்பதாக கூறிய மத்திய அரசு, அவனை இந்தியாவுக்கு நாடு கடத்தி, இங்கேயே வழக்கு தொடரவும் நடவடிக்கை மேலும்படிக்க

கேரளா, கர்நாடக மாநிலங்களில் விஸ்வரூபம் படம் வெளியானது - ஆந்திராவில் நிறுத்திவைக்கப்பட்டது

தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பான சூழ்நிலையில் நேற்று வெளியிடப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் படம் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டது.

இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, நடிகர் மேலும்படிக்க

Friday, January 25, 2013

பத்மபூஷன் விருதை புரக்கணித்த ஜானகி

சமீபத்தில் இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களும் ஒருவர்.

அறிவிக்கப்பட நேரத்திலேயே தனக்கு இந்த விருது வேண்டாம் என்று அறிவித்துள்ளார். இது இசை சமூகத்தில் மேலும்படிக்க

விஸ்வரூபம் படத்தை வெளிமாநிலங்களுக்கு சென்று பார்த்து வரும் தமிழக ரசிகர்கள்

விஸ்வரூபம் படத்திற்க்கு தமிழகத்தில் தடை விதித்துள்ளதால் அண்டை மாநிலங்களுக்கு சென்று அவரது ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இதில் பல முஸ்லீம் ரசிகர்களும் உண்டு எனபது குறிப்பிடத்தக்கது. மேலும்படிக்க

இரண்டு அமைச்சர்கள் திடீர் ராஜினாமா

க‌ர்நாடகாவில் இரு அமைச்சர்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

அமைச்சர்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். கர்நாடகாவில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் எடியூரப்பா ஆதரவாளர்களான ஷோபா, உதய்ஸி ஆகியோர் மேலும்படிக்க

ஆஸ்திரேலிய ஓபன்:முர்ரே அபார ஆட்டம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பிரிட்டனின் ஆன்டி முர்ரே.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை சந்திக்கிறார் முர்ரே.

ஆஸ்திரேலியாவின் மேலும்படிக்க

நாளைய போட்டியில் விளையாடுவார தோனி? : பெரு விரல் காயத்தால் அவதி

 பெரு விரலில் காயம் அடைந்த தோனி, நேற்று நடந்த பயிற்சியில் பங்கேற்றதால், நாளை நடக்கவுள்ள ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மேலும்படிக்க

ஏன்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் மேலும்படிக்க

இந்தியா குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சி : ஜனாதிபதி பெருமிதம்

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி சிறப்புரையாற்றினார். நாட்டின் 64-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி , தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில்:

நாடு மேலும்படிக்க

பத்ம விருதுகள் அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பிரபல பட தாயாரிப்பாளர் ராமா நாயுடு, நடிகைகள் ஸ்ரீதேவி, ஷர்மிளா தாகூர் உள்பட 108 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, பின்னணி பாடகி எஸ்.ஜானகி, மறைந்த மேலும்படிக்க

கள்ளக்காதல் விவகாரம் : பெண்ணுக்கு அரிவாள் வெட்டு 4வது காதலனுக்கு போலீஸ் வலை

மார்த்தாண்டம் அருகேயுள்ள கண்ணன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுபத்திரா (வயது 37). காதலித்து திருமணம் செய்தனர். கணவனை பிரிந்த சுபத்திரா ஆற்றங்கரை பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மேலும்படிக்க

திருச்சி அருகே கள்ளக்காதலியை கொல்ல முயன்ற காதலன் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நரசிங்க மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 42). இவரது மனைவி வசந்தி (வயது 36). பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு கடந்த மேலும்படிக்க

டீசல் விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் : ஜெயலலிதா

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்படும் டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்கவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்படிக்க

விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை

கமலின் விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு இஸ்லாமிய சமூகத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக மேலும்படிக்க

கள்ளக்காதலனுடன் உல்லாசம் - மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற கணவன்

பழனியில், பட்டாளத்து தெருவில் வசிப்பவர் முருகானந்தம். இவரது மனைவி கலாவதி(வயது 32). இவருக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. கலாவதிக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் முருகேசன் என்பவருக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டது. இருவரும் மேலும்படிக்க