google1

Friday, March 9, 2012

பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூமியில்............!!! - கவியன்பன் கலாம்

படைத்தவன் படைத்த
பாமாலை
பாரெங்கும் பூத்திருக்கும்
 பூஞ்சோலை
 
கருப்பையின் கதகதப்பு
அன்னையின் அரவணைப்பு
அத்தனையும் வாடாத பூ
 
 
மனைவியின் இதழ்
மலரும் சிரிப்பு
மாதுளையின் பூ
 
மழலையின்
மாசிலாப் புன்சிரிப்பு
மல்லிகைப் பூ
 
காதலியின்
கன்னச் சிவப்பு
கவரும் ரோசாப் பூ
 
நண்பனின் நட்பு
நாளும் பாதுகாப்பு
அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சிப் பூ
 
உறவென்பது
கதம்பப்பூ

 
அத்தனைக்கும்
ஆணிவேர் அன்பு
 
ஆனால்,
 
கல்லின் மீது
பூ வீசியவர்கள்
முதன் முதலாய் மேலும்படிக்க

No comments:

Post a Comment