google1

Sunday, March 4, 2012

இயற்கையெனும் இளையகன்னி ஏங்குகிறாள் நிலையை எண்ணி…!! - “கவியன்பன்” கலாம்



புத்தனுக்கு போதிமரம்

குப்பனுக்கு ஏது மரம்?

 

ஒஸான் படலம்

ஓட்டையால் துன்பப் படலம்

வீசுமாக் காற்றும்; மரங்கள்

வீழ்ந்திடும் போழ்தும்

 

"ஏசி"க் காற்றும் இனி

ஏழைக்கு எட்டாக் கனி

மரங்கள்

பூமித்தாயின்

பூர்விக சேய்கள்

வளர்த்தால் நேயமாய்த்

தீர்க்கும் நோய்கள்

வளர விடாமல்

வாளால் அறுப்பவர்கள்

வஞ்சக மனிதப் பேய்கள்

 

மரமெனும் தாயை �ழிக்க

மரத்தினாலான கோடரியை

மனிதனும் துணைக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment