google1

Saturday, June 23, 2012

மரித்துப் போன மண்வெட்டி !

அதிகாலை துயில் எழும்பி
ஆனந்தமாய் வயலிறங்கி
ஆங்காங்கு அணைகட்டி
பயிர் பசியாற நீர் பாய்ச்சி
உச்சி வெளியில் ஓரமாய்
கண்ணயர்ந்து, மாலை கதிரவன்
மலையில் மறைந்த பின்னே
கொண்டவன் தோளில் துஞ்சி
வீடும் வரும் அந்நாளை எண்ணியே
இன்றைய கற்காரை கலவையில்
மருத்து பின்...
மரித்துப் போனது மண்வெட்டி !


மேலும்படிக்க

No comments:

Post a Comment