google1

Tuesday, April 24, 2012

அன்பு - "கவியன்பன்" கலாம்

மனக்கேணியின்
வற்றாத ஊற்று
உயிர்க் கயிற்றால்
உணர்வு வாளியைக் கட்டி
கண்களாம் குடங்களில் ஊற்று
கண்ணீராகும் அன்பு ஊற்று

அள்ளிக் கொடுத்தால்
அளவின்றித் திருப்பிக்
கிடைக்கும் சூட்சமம்

பக்தி, பாசம், நட்பு, காதல்
பற்பல கிளைகள் கொண்ட
அற்புத மரத்தின் ஆணிவேர்

பூமிச் சுற்றவும்
பூமியைச் சுற்றியும்
பூர்வீக அச்சாணி
மேலும்படிக்க

No comments:

Post a Comment