google1

Tuesday, February 28, 2012

போர்க்களத்துக் குதிரைகள் - தீபிகா










குண்டுபட்டு விழுந்த வீரர்களின்

போர்க்களக் குதிரைகள்

சுமப்பதற்கு யாருமற்று

அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன.


எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த

அவற்றின் கால்கள்

நடக்கமுடியாத கனதியோடு

புல்வெளியற்ற சாம்பல் மேடுகளுக்குள்

ஆழப் புதைகின்றன.


குதிரைகளால் பேசமுடியாதிருக்கிற

வலிமிகுந்த வார்த்தைகளு��்கு

யாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.

 

கண்களினோரங்களில் கண்ணீர் வழிந்திருக்கிற

அவற்றின் வயிறுகள்

தண்ணீருக்காக எல்லோர் முகங்களையும்

மேய்கின்றன.

 

தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்

தண்ணீர் மேலும்படிக்க

No comments:

Post a Comment