Tuesday, November 29, 2011

நான் என்ன காம இயந்திரமா

விலை கொடுத்தா
வாங்கி வந்தாய்
புணர்ந்து முடித்து
உதறிப் போகின்றாய்...

வியர்வை முத்துக்கள்
இனிப்பாக்க
தென்றல் வேண்டும்
நீயோ
உன் புழுக்கம் போக்க
எழுந்து போகின்றாய்
எனக்கும் புழுங்குகிறது...

காமமும் மோகமும்
காதல் இல்லாதபோது
வலிக்கிறது...

நான் என்ன இயந்திரமா
உன் தீண்டலுக்கு இயைந்து இயங்கிட
பின்
உன் வேட்கை தணிந்ததும�
நின்று போக...

நடுவிலே ஆரம்பித்து
நடுவிலேயே முடிந்தும் விடுகிறது
என் வேட்கை மேலும்படிக்க

No comments:

Post a Comment