அலங்கரிக்கப்பட்ட
சிரித்த முகம்
வாள்...வேல்
சரிகை உடை.
உள்ளிருந்தபடியே
உலகத்தைக் காக்கும்
கடவுளாம் அவர் !
இன்னும்...
படைத்தலும்
அழித்தலும் கூட அறிபவராம் !
பஞ்சம்...பிணி
போர்...பிரிவினை...வன்முறை
மனிதம் மறந்த உயிரினங்கள்
உயிரோடு போராட....
பாலும் தேனும் பஞ்சாமிர்தமும்
தலைவழி வழிய
குளிரக் குளிர ஒரு கல் !
ஆடம்பர ரோபோக்களின்
அரோகரா சத்தத்துள்
கரகரத்த ஒரு மேலும்படிக்க
No comments:
Post a Comment